யாழ்.இந்திய துணை துாதரகம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்த யாழ்.மாவட்ட மீனவர்கள் தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.இந்திய துணை துாதரகம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்த யாழ்.மாவட்ட மீனவர்கள் தீர்மானம்..

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்.மாவட்ட மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்த தீர்மானித்துள்ளனர். 

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களினால், பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகள் நாளாந்தம் இழப்பு ஏற்படுகின்றது. 

ஆகையினால் அதனை கண்டித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக யாழ்.மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பாக, தமக்கு நியாயமும் இழப்பீடும் கோரியே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு