மாட்டுடன் மோதி கோர விபத்து..! யாழ்.பருத்துறையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பலி.. இன்று அதிகாலை சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மாட்டுடன் மோதி கோர விபத்து..! யாழ்.பருத்துறையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பலி.. இன்று அதிகாலை சம்பவம்..

கிளிநொச்சி - பரந்தன் சந்தியை அண்மைதித்த பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பரந்தன் சந்தியை அண்மித்த விவசாய விதைப் பண்ணைக்கு முன்பாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் 

இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரான வடமராட்சியை சேர்ந்த மேரிஜாக்சன் அன்ரனி (வயது 30) 

என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது. இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு