யாழ்ப்பாணம் கடத்திவரபட்ட வெண் சந்தண மரக்குற்றிகளுடன் வாகனத்தை துரத்தி பிடித்த இராணுவம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் கடத்திவரபட்ட வெண் சந்தண மரக்குற்றிகளுடன் வாகனத்தை துரத்தி பிடித்த இராணுவம்..!

யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட வெண் சந்தண மரக்குற்றிகளுடன் வாகனம் ஒன்றை இராணுவம் கைப்பற்றியுள்ளது. எனினும் வாகனத்திலிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். 

இந்த நடவடிக்கை நேற்று இரவு இடம்பெற்றதுடன், சந்தேகநபர்கள் வாகனத்தை அவ்விடத்தில் விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சங்குப்பிட்டி – பூநகரி இடையிலான இராணுவத்தின் வீதித் தடைப் பகுதியில் குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்ற நிலையில், 

இராணுவத்தின் நடவடிக்கையில் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.இதன்போது, கிட்டத்தட்ட நூறு அளவிலான வெண் சந்தனம் மற்றும் பாலை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இவற்றை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு