இரணைதீவு மக்களின் மகஜரை கையேற்க மறுத்த பூநகரி பிரதேசசபை..! மக்கள் கடும் அதிருப்தி..

ஆசிரியர் - Editor I
இரணைதீவு மக்களின் மகஜரை கையேற்க மறுத்த பூநகரி பிரதேசசபை..! மக்கள் கடும் அதிருப்தி..

கொவிட் 19 தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் சடலங்களை இரணைதீவில் நல்லடக்கம் செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானத்தை எதிர்து மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இணைந்து, 

மகஜர் ஒன்றை கையளிக்க சென்றிருந்த நிலையில், குறித்த மகஜரினை பொறுப்பேற்க பிரதேசசபை நிர்வாகம் மறுத்திருப்பதாக, மகஜர் கையளிக்க சென்றிருந்த மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 

இன்று காலை 11 மணியளவில் பூநகரி பிரதேச சபையினருக்கு குறிதத் மகஜரை வழங்குவதற்காக குறித்த குழுவினர் சென்றுள்ளனர். இதன்போது குறித்த மகஜரை ஏற்றுக்கொள்வதற்கு பிரதேச சபையினர் முன்வவில்லை. 

பொறுப்பு வாய்ந்த தரப்பினரான பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் ஊழியர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்ட போதிலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய பொறுப்புவாய்ந்த பொறுப்பில் உள்ள பிரதேச சபை பொதுமக்கள் விடயம் சார்ந்து பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு