ஜனாசா நல்லடக்க விவகாரம்..! போராட்டத்தில் இறங்கிய இரணைதீவு மக்கள் மகஜரும் கையளிப்பு..

ஆசிரியர் - Editor I
ஜனாசா நல்லடக்க விவகாரம்..! போராட்டத்தில் இறங்கிய இரணைதீவு மக்கள் மகஜரும் கையளிப்பு..

கிளிநொச்சி - இரணைதீவில் கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாசா நல்லடக்கம் செய்யும் தீர்மானத்தை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளதுடன், பூநகரி பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். 

குறித்த போராட்டம் இன்று காலை 09 மணியளவில் இரணைமாதாநகர் இறங்குதுறையில் இடம்பெற்றது. இரணைதீவு மக்களும் கிராம மட்ட மைப்புக்கள் மற்றும் கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் 

பங்கு தந்தையர்களும், சிவில் அமைப்புக்களும் கலந்து கொண்டனர்.கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவு பகுதியை தெரிவு செய்துள்ளதாக நேற்றைய தினம் 

அமைச்சரவை பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.குறித்த தீர்மானம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும், அப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதிக்கு அறிவித்தல் ஏதுமின்றி இரகசியமாக சென்ற குழு அதற்கான சிபாரிசினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இன்று குறித்த பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு 

பூர்வீக குடிகளாக இருந்த மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். மேலும் இதன்போது பூநகரி பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு