திருமணத்திற்கு அவசரப்படக் கூடாது!! -இரு குழந்தைகளை பெற்ற பின் சமீரா ரெட்டி பரபரப்பு கருத்து-

ஆசிரியர் - Editor II
திருமணத்திற்கு அவசரப்படக் கூடாது!! -இரு குழந்தைகளை பெற்ற பின் சமீரா ரெட்டி பரபரப்பு கருத்து-

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த சமீரா ரெட்டி திருமணம் செய்து கொள்வது தொடர்பில் அவசரமாகவோ பயந்தோ எந்த முடிவும் எடுத்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். 

அவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ள நிiயில் அவர் தற்போது வெளியிட்டுள்ள இக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமான சமீரா ரெட்டி அஜித்குமாருடன் அசல், விசாலுடன் வெடி, ஆர்யாவின் வேட்டை படங்களில் நடித்தார். இதுமட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார். 

2014 இல் தொழில் அதிபர் அக்‌சய் வர்டேவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருமணத்துக்கு பின் சமீரா ரெட்டி படங்களில் நடிக்கவில்லை. 

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில்:- பெண்களிடம் பலரும் திருமணம் தொடர்பில் கேட்கிறார்கள். எனக்கு 35 வயதிலும் திருமணம் நடக்காமல் இருந்ததை பார்த்து எப்போது திருமணம் செய்து கொள்வாய், குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள போகிறாய்? என்று கேள்வி எழுப்பினார்கள். 

இதனால் எனக்கு ஒருவித பயம் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளவும் குழந்தை பெற்றுக்கொள்ளவும் பெண்களுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். 

திருமணமான பின் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து அழுத்தம் கொடுக்கின்றனர். குழந்தை பிறந்தால் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வீர்களா? என்று கேட்பார்கள். இதற்கெல்லாம் பதில் அளிக்க வேண்டி உள்ளது. திருமணம் செய்து கொள்வது தொடர்பில் அவசரமாகவோ பயந்தோ எந்த முடிவும் எடுத்து விடக்கூடாது என்றுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு