நடு வானில் பயணிக்கு மாரடைப்பு!! -பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்-

ஆசிரியர் - Editor II
நடு வானில் பயணிக்கு மாரடைப்பு!! -பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்-

சார்ஜாவிலிருந்து லக்னோவுக்கு சென்ற இந்திய விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அந்த விமானம் பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பாகிஸ்தான் விமானப்போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட தகவலின் படி, சார்ஜாவிலிருந்து லக்னோவுக்கு பயணித்த இண்டிகோ ஏர்லைன்சிக்கு சொந்தமான 6இ1412 பயணிகள் விமானம், ஈரான் வழியாக பாகிஸ்தானுக்கு வந்தது. 

இந்நிலையில் விமானத்தில் பயணி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விமானி, பாகிஸ்தான் விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் கராச்சி விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார்.

உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு விமானம் கராச்சியில் தரையிறங்கியது. எனினும், 67 வயதான பயணி ஹபீபுர் ரஹ்மான் மாரடைப்பால் விமானத்திலே இறந்துவிட்டார் என்று பாகிஸ்தான் மருத்துவ குழு தெரிவித்ததாக பாகிஸ்தான் விமானப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு