யாழ்.காங்கேசன்துறை - தமிழகம் காரைக்கால் இடையில் பயணிகள் படகு சேவை..! புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை - தமிழகம் காரைக்கால் இடையில் பயணிகள் படகு சேவை..! புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து..

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - தமிழகம் காரைக்கால் இடையில் படகு சேவைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது. 

மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று இந்திய அரசின் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்திற்கும் (Sagarmala Development Company Ltd), 

இந்த்ஶ்ரீ பயணிகள் கப்பல் தனியார் நிறவனத்திற்கும் (INDSRI FERRY SERVICES PVT LTD) இடையில் இன்று கைச்சாத்தானது.

இதில் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பில் அதன் முகாமைத்துவ பணிப்பாளர் திரு திலீப்குமார் குப்தா. 

இந்த்ஶ்ரீ பயணிகள் கப்பல் சேவை சார்பில் சோ நிரஞ்சன் நந்தகோபன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இருநாடுகளுக்கிடையலும் பயணிகள் போக்குவரத்து சுமுகமாக தொடங்கியதும் இந்த சேவையை விரைந்து ஆரம்பிக்க இருப்பதாக 

நிரஞ்சன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு