அலுமினிய பொருத்து வேலைகளுக்கான கட்டிடத்தில் ஏறியிருந்த 4 பிள்ளைகளின் தந்தை தவறி விழுந்து பலி..!

ஆசிரியர் - Editor I
அலுமினிய பொருத்து வேலைகளுக்கான கட்டிடத்தில் ஏறியிருந்த 4 பிள்ளைகளின் தந்தை தவறி விழுந்து பலி..!

கிளிநொச்சி அக்கராயன் - ஸ்கந்தபுரம் பகுதியில் அரிசி ஆலை ஒன்றில் அலுமினிய வேலைக்காக மட்டக்களப்பிலிருந்து வந்த 4 பிள்ளைகளின் தந்தை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

பொதுச்சந்தை பின்புர வீதியில் அமைந்துள்ள குறித்த அரிசி ஆலையில் அலுமினிய பொருத்து வேலைகளுக்காக வந்திருந்த குறித்த குடும்பஸ்தர் நெல் பதப்படுத்தும் தொட்டிபொருத்து வேலை முடித்து கீழே இறங்க முயற்சித்தபோதே தவறி விழுந்துள்ளார்.

தவறி விழுந்ததை அவதானித்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் அவர் சிகச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த நபர் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் இவர் மட்டகளப்பை சேர்ந்தவர் எனவும் இராமையா விஜயரத்தினம் 54வயதுடையவரும் ஆவார். குறித்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது,

மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு