யாழ்.மாவட்டத்தில் 12 பேர் உட்பட வடமாகாணத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 12 பேர் உட்பட வடமாகாணத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் இன்று 485 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் பருத்துறை பகுதியில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த 3 பேரும் யாழ்.சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்களாவர். 

மேலும் யாழ்.நகரில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் முல்லைத்தீவு - மல்லாவியில் இடம்பெற்ற இறுதி சடங்கில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பியவர்கள். இதேபோல் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர், 

கோப்பாய் பிரதேசத்தில் ஒருவர், மற்றும் சங்கானை பிரதேசத்தில் 4 பேர் இவர்கள் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் முதற்கட்ட தொடர்பில் இருந்தவர்கள். மேலும் மாந்தை கிழக்கில் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்த

4 பேர் உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு