30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்..! மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்..! மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..

யாழ்.நகரில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக துாய்மையாக்கப்படாத கால்வாய் யாழ்.மாநகர முதல்வர் தலமையில் துாய்மையாக்கும் பணி இன்று இரவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியின் பின்னர் துப்புரவு செய்யப்படாத குறித்த பிரதான வாய்க்கால் இன்றைய தினம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் நெறிப்படுத்தலில் 

யாழ்.மாநகர சபையின் சுகாதார பணியாளர்களால் துப்புரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நகரின் ஸ்டான்லி வீதியிலிருந்த ஆரம்பித்து. 

கடற்கரை வரை செல்லும் இரண்டு கிலோ மீட்டர் நீளமுடைய குறித்த பிரதான வாய்க்கால் யாழ். நகரின் மத்தியில் ஊடாக கடைகள் வீதியின் கீழாக செல்கின்றது.

இந்த துப்பரவு பணி மிக கடினமானதாக இருப்பதனால் மாநகர சபையின் நோயாளர் காவு வண்டியும் குறித்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பித்திருக்கின்ற இந்த துப்பரவு பணி இன்னு சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்ப்பதாக மாநகர சபை முதல்வர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு