ஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்!! -இலங்கை பெண் பரபரப்பு புகார்-

ஆசிரியர் - Editor II
ஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்!! -இலங்கை பெண் பரபரப்பு புகார்-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள ஆர்யா மீது, இளம் பெண் ஒருவர் மோசடி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். 

ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 70 இலட்சம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண் முறைப்பாடு செய்துள்ளார். 

குறித்த பெண் தற்போது ஜெர்மன் நாட்டில் குடியுரிமை வாங்கி வாழ்ந்து வருகிறார். இப்போது அவர் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு இணையம் ஊடாக முறைப்பாடு செய்துள்ளார். 

அந்த முறைப்பாட்டில் பணத்துக்கு கஸ்டப்படுவதாக ஆர்யா தன்னிடத்தில் கூறினார் என்றும் தன்னை விரும்புகிறேன் என்றும் திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்றும் அந்த பெண் கூறியதாக தெரிவித்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு