திருமணத்திற்கு முதல் நாள் மணமகன் மாரடைப்பால் சாவு!! -கதறிய அழுத மணப் பெண்-

ஆசிரியர் - Editor II
திருமணத்திற்கு முதல் நாள் மணமகன் மாரடைப்பால் சாவு!! -கதறிய அழுத மணப் பெண்-

ராமநாதபுரம் கடலாடி பகுதியில் காலையில் திருமணம் நடந்த இருந்த நிலையில் மணமகன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணமகனான விக்னேஸ்வரன் மணமகள் வீட்டுக்கு பால் பழம் சாப்பிடும் நிகழ்வுக்கு சென்றுள்ளார். மணப் பெண் வீட்டார் பால், பழம் சாப்பிட கொடுத்த சமயத்தில் விக்னேஸ்வரனுக்கு திடீரென்று மாரடப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் துடிதுடித்த மணமகனை பார்த்த மணமகள் வீட்டார் பதறிப் போனார்கள். பின்னர், விக்னேஸ்வரனை சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். 

விக்னேஸ்வரை பரிசோதித்த வைத்தியர்கள் முன்னரே இறந்து விட்டதாக கூறி விட்டனர். இச் சம்பவம் திருணம நிகழ்விற்காக ஒன்று கூடியவர்கள் மத்தியில் இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு