மீண்டும் ஆட்சியை கைபப்பற்ற உண்மைத் தொண்டர்கள் பாடுபட வேண்டும்!! -சசிகலா வேண்டுகோள்-

ஆசிரியர் - Editor II
மீண்டும் ஆட்சியை கைபப்பற்ற உண்மைத் தொண்டர்கள் பாடுபட வேண்டும்!! -சசிகலா வேண்டுகோள்-

தான் மறைந்த பின்னும் நூறாண்டுக்காலம் அ.தி.மு.க ஆட்சி நிலைக்கும் என்று ஜெயலலிதா கூறியதை உண்மையாக்கும் வகையில் மீண்டும் ஆட்சியமைக்கக் கழகத் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டிச் சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு சசிகலா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த சசிகலா:- நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒன்றுபட்டு மீண்டும் ஆட்சி அமைக்கப் பாடுபட வேண்டும் எனக் கூறினார். பொது எதிரியான தி.மு.கவைத் தோற்கடிக்க உறுதிபூண வேண்டும் என்றும் சசிகலா தெரிவித்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு