மனைவிக்கு போதை ஊட்டி இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட வைத்தியர்!!- கொடுமை தாங்காத மனைவி தற்கொலை-

ஆசிரியர் - Editor II
மனைவிக்கு போதை ஊட்டி இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட வைத்தியர்!!- கொடுமை தாங்காத மனைவி தற்கொலை-

வைத்தியர் ஒருவர் தன் மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து இயற்கைக்கு மாறான கொடூரமான பாலியல் உறவு கொண்டதால், கொடுமையை தாங்கிக் கொள்ளாத மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் காட்லோடியா பகுதியை சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டில் திருமண தகவல் மையம் மூலம் அவர்கள் இவ்விருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், கடந்த 9 ஆம் திகதி வீட்டுக்கு வெளியே குறித்த வைத்தியரின் மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பொலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணையை ஆரம்பித்தனர்.

வைத்தியரின் வீட்டை சோதனையிட்ட பெலிஸார் உயிரிழந்த பெண் அவரின் கைப்பட எழுதியிருந்த 18 பக்க கடிதத்தை அறையிலிருந்து கண்டெடுத்துள்ளனர். அந்த கடிதத்தில் உள்ளவற்றை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்த கடிதத்தில், 'எனது கணவருக்கும் எனக்கும் இடையில் உள்ள பாலியல் உறவு மிகவும் கொடூரமானது. அவர் வைத்தியர் என்பதால், அவ்வப்போது எனக்கு போதைப் பொருட்களைக் கொடுப்பார். நான் மயக்கமடைந்தவுடன், என்னை கட்டாயப்படுத்தி இயற்கைக்கு மாறான கொடூரமான பாலியல் உறவு கொள்வார்.

இவ்வாறான பாலியல் உறவு கொள்வதற்கான பலமுறை என்னை மயக்கமடைய செய்துள்ளார். எனது மாமியாரும், எனது கணவரும் திருமணமான சில நாட்களிலேயே என்னை துன்புறத்த்தினார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ள 47 வயதான வைத்தியரையும் அவரது தந்தை மற்றும் தாய்  ஆகியோரையும், தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு