வீதியில் ஆட்டோவை நிறுத்திவிட்டு பெற்றோல் முடிந்துவிட்டதாக கூறி பணம் மற்றும் பெற்றோல் வசூலித்த கும்பல் மடக்கி பிடிக்கப்பட்டது..! யாழ்.நாவற்குழயில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வீதியில் ஆட்டோவை நிறுத்திவிட்டு பெற்றோல் முடிந்துவிட்டதாக கூறி பணம் மற்றும் பெற்றோல் வசூலித்த கும்பல் மடக்கி பிடிக்கப்பட்டது..! யாழ்.நாவற்குழயில் சம்பவம்..

யாழ்.நாவற்குழி பாலத்திற்கு அருகில் ஆட்டோவை நிறுத்திவிட்டு பெற்றோல் முடிந்துவிட்டதாக கூறி வீதியால் செல்வோரிடம் பணம் வாங்கிவந்த கும்பல் அப்பகுதி இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸார் மற்றும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. நாவற்குழி பாலத்திற்கும் யாழ்ப்பாணம் வரவேற்பு வளைவுக்கும் இடையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு இந்த நுாதன திருட்டு இடம்பெற்றுவந்த நிலையில்,

 

விடயம் தொடர்பாக அப்பகுதி இளைஞர்களுக்கு பொதுமக்கள் சிலர் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து நாவற்குழி இளைஞர்கள் குறித்த பகுதிக்குச் சென்று சம்பவத்தை அவதானித்து, கொள்ளையர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். 

சம்பவ இடத்தில் இராணுவத்தினர் வருகை தந்திருந்த நிலையில், சாவகச்சேரிப் பொலிஸாருக்கு இளைஞர்கள் தகவலை வழங்கியதையடுத்து பொலிஸார் வருகைதந்தனர், குறித்த கொள்ளைக் குழுவைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு