இலங்கை தமிழரின் சமத்துவமான, கௌரவமான வாழ்வை உறுதி செய்வது இந்தியாவின் பொறுப்பு!

ஆசிரியர் - Admin
இலங்கை தமிழரின் சமத்துவமான, கௌரவமான வாழ்வை உறுதி செய்வது இந்தியாவின் பொறுப்பு!

இலங்கையில் தமிழ் அகதிகள் சமத்துவம் கௌரவம் சமாதானம் ஆகியவற்றுடன் வாழ்வதை உறுதி செய்வது குறித்து இந்திய மத்திய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இடம்பெற்ற பாஜகவின் இளைஞர் அணியின் மாநாட்டில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் அகதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் மோடி தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். 2015 இல் பிரதமரான பின்னர் மோடி யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.

யாழ்ப்பாணம் சென்ற ஒரேயொரு பிரதமர் அவர் உள்நாட்டு யுத்தம் காரணமாக வீடுகளை இழந்த சகோதர சகோதரிகளிற்கு நாங்கள் வீடுகளை வழங்கியுள்ளோம் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு