வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் தீச்சட்டிப் போராட்டம்

ஆசிரியர் - Admin
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் தீச்சட்டிப் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் 4 ஆண்டுகளை எட்டியுள்ளதை முன்னிட்டு, காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகள் இன்று தலையில் தீச்சட்டி ஏந்திய கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

தீச்சட்டி பேரணி கிளிநொச்சி – பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பித்து கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலினை சென்றடைந்தது. 

இந்த தீச்சட்டி கவனயீர்ப்பு எமக்கான நீதியை சர்வதேசம் பெற்று தருவதற்காக சர்வதேசத்தில் உள்ள அனைவரினது நெஞ்சங்களிலும் பதியப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னெடுக்கப்படுவதாக உறவுகள் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு