யாழ்.நவாலியில் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, பெற்றோல் குண்டு வீசி வன்முறைக் கும்பல் அட்டூழியம்..! இன்று அதிகாலை சம்பவம்...

ஆசிரியர் - Editor I

யாழ்.நவாலி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்று தீ பிடித்து எரிந்துள்ளது.

அதிகாலையில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த வன்முறை கும்பல் வீட்டின் கதவுகளை அடித்து சேதப்படுத்திவிட்டு  பெட்ரோல் குண்டு வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு