ஜனாதிபதியின் ஆலோசனையை தொடர்ந்து கொவிட்-19 தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் பணி இன்று ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு வழங்கும் செயற்றிட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, மேல் மாகாணத்திலுள்ளவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

மேல் மாகாணத்தில் அதிக பணியாளர்கள் காணப்படும் பகுதிகள் மற்றும் கொரோனா தொற்று ஏற்படக்கூடிய வயதெல்லையில் உள்ளவர்களுக்கே 

முதல் கட்டத்தில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு