யாழ்.போதனா வைத்தியசாலையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று..! வடக்கில் இன்று 4 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று..! வடக்கில் இன்று 4 பேருக்கு தொற்று..

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 340 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 2 பேருக்கும், 

யாழ்.மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வருகைதந்த ஒருவர் நெஞ்சுலி காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்

அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மன்னார் மாவட்டத்தில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு