4 பெண்கள் உட்பட 5 பேர் நேற்று மட்டும் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றினால் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த

61 வயதான பெண்ணொருவரும் வக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 66 வயதான பெண்ணொருவரும், வெலிமட பகுதியைச் சேர்ந்த 66 வயதான பெண்ணொருவரும், 

பமுனுவ பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்ணொருவரும் தும்மலசூரிய பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய 11 மாவட்டங்களில் 51 பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமான இரண்டாம் அலையின் பின்னர் மாத்திரம் 64 000 இற்கும் அதிக தொற்றாளர்கள் 

இனங்காணப்பட்டுள்ளதோடு இவர்களில் 25 000 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு