சசிகலாவை வரவேற்க 1000 வாகனங்களில் படையெடுக்கும் தொண்டர்கள்!!

ஆசிரியர் - Editor II
சசிகலாவை வரவேற்க 1000 வாகனங்களில் படையெடுக்கும் தொண்டர்கள்!!

சிறையில் இருந்து விடுதலையாகவுள்ள சசிகலாவை வரவேற்பதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 ற்க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் பயணமாகியுள்ளனர். 

சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா எதிர்வரும் 27 ஆம் திகதி விடுதலையாவார் என்று சிறைத்துறை அறிவித்துள்ளது. சசிகலா விடுதலை ஆவதையொட்டி அ.ம.மு.க.வினர் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து சசிகலாவை வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை அவர்கள் செய்து வருகிறார்கள். சிறைத்துறை தகவல்படி சசிகலா 27 ஆம் திகதி  காலை 10 மணிக்கு விடுதலை ஆவார் என தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அ.ம.மு.க.வினர் 26 ஆம் திகதியே பெங்களூருவுக்கு செல்கின்றனர்.

குறிப்பாக 3 மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 1000 ற்க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று சசிகலாவை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு