சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு!!- -விடுதலையாகும் நேரத்தில் சுவாச பிரச்சினையால் அவதி-

ஆசிரியர் - Editor II
சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு!!- -விடுதலையாகும் நேரத்தில் சுவாச பிரச்சினையால் அவதி-

சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் அவதிப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சசிகலா வருகிற 27 ஆம் திகதி விடுதலையாகிறார் என்பதை பெங்களூரு சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு சிறை நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு