27 ஆம் திகதி சசிகலா விடுதலை!! -சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது-

ஆசிரியர் - Editor II
27 ஆம் திகதி சசிகலா விடுதலை!! -சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது-

சிறையில் ,ருந்து சசிகலா எதிர்வரும் 27 ஆம் திகதி விடுதலையாகிறார் என்று பெங்களூரு சிறைச்சாலை நிர்வாகம் அதிகாரப்பூர்வகமாக அறிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சசிகலா, சுதாகரன், ,ளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு விதிக்கப்பட்ட 10 கோடியே 10 ஆயிரம் சசிகலா சார்பில் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது. சசிகலா அபராத தொகையை செலுத்தி ,ருந்தாலும், சிறை விதிமுறைகளின்படி அவர் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை என சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது.

,ந்நிலையில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா எதிர்வரும் 27 ஆம் திகதி  விடுதலையாகிறார் என்பதை பெங்களூரு சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு