3 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய தாய்!! -கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு-

ஆசிரியர் - Editor II
3 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய தாய்!! -கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு-

கள்ளக்காதலுடன், 5 வயது ஆண் குழந்தையை தூக்கி கொண்டு சென்ற மனைவியை மீட்டு தருமாறு கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

மும்பை சாக்கிநாக்கா பகுதியில் பெண் ஒருவர் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். குறித்த பெண்ணின் கணவர் காவலாளியாக வேலை செய்து வருகின்றார். 

கடந்த சில நாட்களுக்கு முன் பெண்ணின் கணவர் சீரடியில் நடந்த உறவினரின் திருமணத்திற்கு சென்று உள்ளார். வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு சென்று உள்ளார்.

இந்தநிலையில் மறுநாள் அவர் திரும்பி வந்த போது பெண் குழந்தைகள் 3 பேர் மட்டும் வீட்டில் இருந்தனர். மனைவி, 5 வயது ஆண் குழந்தை இல்லாததை பற்றி தனது பெண் குழந்தைகளிடம் கேட்டார்.

அப்போது தாய், தம்பியுடன் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிவரவில்லை என கூறினர். பல இடங்களிலும் மனைவி மற்றும் பிள்ளையை தேடிய கணவர் தமனது மனைவி கல்யாண் பகுதியை சேர்ந்த கள்ளக்காதலனுடன் மாயமானது தெரியவந்தது.

இந்நிலையில் கள்ளக்காதலுடன் சென்ற மனைவியை மீட்டு தருமாறு அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு