காளை குத்தியதில் இளைஞர் பலி!! -அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சோகம்-

ஆசிரியர் - Editor II
காளை குத்தியதில் இளைஞர் பலி!! -அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சோகம்-

அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை குத்தியதில் படுகாயமடைந்த மாடுபிடி வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சனிக்கிழமை உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் போட்டி நடந்தது.

இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்ததில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 48 பேர் காயம் அடைந்தனர். மேலும் படுகாயமடைந்த 14 பேர் மேலதிக சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் ஜல்லிக்கட்டின் போது காளையை போட்டிக்கு அழைத்து சென்றபோது மாடு குத்தி படுகாயமடைந்த நவமணி என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு