கொரோனா தடுப்பூசி நாளை முதல் போடப்படும்!! -நாடு முழுவதும் 3006 மையங்கள்-

ஆசிரியர் - Editor II

இந்தியாவில் நாளை கொரோனா வைரசுக்கான தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதிலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

நாளை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை காணொளி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3006 மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற உள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு