யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் 5 மாவட்டங்களிலும் பொது சந்தைகளை திறக்க அனுமதி..! திருமண மண்டபங்கள் 150 பேருடன் திருணம் நடத்தலாம்.. சுகாதார பிரிவு தீர்மானம்..

ஆசிரியர் - Editor I

கொரோனா அபாயம் காரணமாக வடமாகாணத்தில் முடக்கப்பட்டிருந்த சந்தைகளை மீள திறப்பதற்கு மாகாண சுகாதார பிரிவு அனுமதியளித்திருக்கின்றது. 

சந்தைகளை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல் ஒன்று மாகாண சுகாதார பணிப்பாளர் தலமையில் இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம்

எடுக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் மாகாணத்தில் உள்ள சகல சந்தைகளையும் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. 

மேலும் திருமண மண்டபங்களை திறக்கவும், 150 பேருடன் திருமணங்களை நடத்தவும் அனுமதி வழங்கப்படுவதென இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு