இரணைமடு குளத்திலிருந்து நீர் வெளியேற்றப்படும் நிலையில் வடிநில பகுதிகளில் வாழும் மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - இரணைமடு குளத்திற்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வான் கதவுகளும் திறக்கப்பட்டு தொடர்ந்து வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. 

இதனால் இரணைமடு மேலதிக நீர் வெளியேற்றப்படும் நிலையில் வடிநில பகுதிகளில் உள்ள கிராம மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரித்துள்ளது. 

தொடர்ச்சியாக இரணைமடு குளத்தில் இருந்து நீரை வெளியேற்ற வேண்டிய தேவை இருப்பதாலும் ஏனைய குளங்கள் வான் பாய்ந்து கொண்டிருப்பதனாலும் 

சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்று வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் தங்களது பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படும் ஆக இருந்தால் கிராம சேவகரை தொடர்பு கொண்டு அதற்குரிய மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு