முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அழிப்பை கண்டித்து வடக்கில் பூரண ஹர்த்தால்..! வர்த்தக நிலையங்கள், நகர வீதிகள் வெறிச்சோடின..

ஆசிரியர் - Editor I

யாழ். பல்கலைக்கழக வளாத்தில் அமைக்கப்பட்ட நினைவு தூபி இடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உணர்வுபூர்வமாக ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டது.

அனைத்து தமிழ் கட்சிகள் , மாணவர் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புகளால் கதவடைப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்திற்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட வர்த்தகர்கள் பொதுமக்கள் பெரும் ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

 யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது.

தனியார் போக்குவரத்து சேவை இடம்பெறவில்லை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

அரச பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

அத்தோடு பாடசாலையின் கல்வி செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு