வவுனியா நகர் கொரோனா கொத்தணியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
வவுனியா நகர் கொரோனா கொத்தணியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தொற்று உறுதி..

வவுனியா நகர் கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறினார். 

இதன்மூலம் வவுனியா நகர கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60ஆக உயர்வடைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் உள்ள பஜார் வீதி, 

தர்மலிங்கம் வீதி மற்றும் மில் வீதிகளில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் கடமை புரிபவர்களுள் 54 பேருக்கு நேற்றுமுன்தினம் கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று 192 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. 

அவர்களில் 6 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவருக்கு தொற்று உள்ளமையும்

 இன்று இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு