பல்கலைகழக மாணவர்களுடன் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவன் உணவு தவிர்ப்பை முடிவுறுத்தி வீடு திரும்பினார்..!

ஆசிரியர் - Editor I
பல்கலைகழக மாணவர்களுடன் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவன் உணவு தவிர்ப்பை முடிவுறுத்தி வீடு திரும்பினார்..!

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அழிக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் நடத்தும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பாடசாலை மாணவனின் உணவு தவிர்ப்பை முடிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். 

நினைவு முற்றம் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து பல்கலைகழக வளாகத்திலிருந்து இராணுவம், பொலிஸார் வெளியேறவேண்டும். எனவும் நினைவு முற்றம் அழிக்கப்பட்டதை கண்டித்தும் மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். 

இந்நிலையில் இந்துக்கல்லுாரி மாணவன் ஒருவனும் பல்கலைகழக மாணவர்களுடன் இணைந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்று இணைந்திருந்தான். இந்நிலையில் பாடசாலை மாணவன் என்பதாலும், குடும்பம் மற்றும் தாயாரின் நிலை கருதி பல்கலைகழக மாணவர்களின் கோரிக்கைக்கு 

அமைவாக உணவு தவிர்ப்பை முடிவுறுத்தி மாணவன் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டான். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு