தமிழ்தேசிய கூட்டமைப்பின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்..! நாளை பீ.சி.ஆர் பரிசோதனைக்கு முஸ்த்தீபு..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்..! நாளை பீ.சி.ஆர் பரிசோதனைக்கு முஸ்த்தீபு..

நாடாளுமன்ற உறுப்பினர் றவூவ் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினருடன் நெருக்கமான தொடர்புகளை பேணிய எதிர்கட்சி உறுப்பினர்கள் 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

குறித்த தகவலை நாடாளுமன்ற அலுவலகம் தெரிவித்துள்ளது.அவர்கள் நான்கு பேரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகிய இருவரும் அடங்குகின்றனர். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு 

சிகிச்சை வசதியைப் பெற்றுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலதா அதுகொரல, கஜந்த கருணாதிலக ஆகியோரும் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர். அவர்கள் நால்வரிடமும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற சிசிரிவி கமராக்களின் பதிவுகளின் அடிப்படையில் கடந்த 5 ஆம் திகதி நாடாளுமன்றில் ரவூக் ஹக்கீமுடன் நெருக்கமாகப் பழகிய உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 நாள்களில் தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு