முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அழிக்கப்பட்டதை கண்டித்து உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தும் மாணவர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உடைக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்திவரும் நிலையில், போராட்டம் நடத்திவரும் மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நோில் சந்தித்து பேசியுள்ளனர். 

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்தித்து பேசியிருக்கின்றனர். இதன்போது எதிர்வரும் திங்கள் கிழமை துணைவேந்தரை நோில் சந்தித்து பேசவுள்ளதாக கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 

இதன்போது அழிக்கப்பட்ட நினைவு முற்றத்தை மிள கட்டுவது தொடர்பாக இதன்போது பேசப்படும். என மாணவர்களுக்கு கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு