யாழ்.பல்கலைகழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு துாபியை அகற்றியது துணைவேந்தரே..! எமக்கு சம்மந்தம் இல்லை, பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அகற்றும் தீர்மானத்தை துணைவேந்தரே எடுத்தார். என இலங்கை பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், நாட்டின் வடக்கு தெற்கு ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் என்பதாலேயே குறித்த தீர்மானத்தை துணைவேந்தர் எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மேலும் உள்நாட்டுப் போரின் 10 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 

வகையில் 2019 ஆம் ஆண்டில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. ஊடகங்கள் துணைவேந்தரிடம் வினவியபோது உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பெயரில் தாம் அதனை அகற்றியதாக கூறியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு