பாடசாலை ஆசிரியர் ஒருவர் உட்பட யாழ்.மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! சாகவச்சோியில் எழுமாற்று பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. பருத்துறை மற்றும் சாவகச்சோி பகுதிகளிலேயே இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இன்று 241 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. பருத்துறையில் தொற்றுக்குள்ளானவர் 26 வயதான இளைஞர் எனவும் அவர் பண்டாரவளையில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் எனவும் கூறப்படுகின்றது. 

இதேவேளை சாவகச்சோி - மந்துவில் பகுதியில் தொற்றுக்குள்ளானவர் பாரவூர்தி நடத்துனர் எனவும் சாவகச்சோி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவட்டத்திற்குள் நுழைபவர்களுக்கு நடத்தப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு