தமிழினத்தின் ஆன்மானை அழிக்கும் மிக குரூரமான ஈனச்செயல்..! முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அழிப்புக்கு தமிழரசு கட்சி கண்டனம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உடைக்கப்பட்ட சம்பவம் தமிழினத்தின் ஆன்மாவை அழித்த மிக குரூரமான செயல் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா குற்றஞ்சாட்டியிருக்கின்றார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அரசின் மேலிடத்தின் உத்தரவின் பிரகாரம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வெள்ளி இரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும் இராணுவத்தினரும் பெரும் எண்ணிக்கையில் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு வழங்க இந்த அருவருக்கத்தக்க - ஈனத்தமான செயல் அரங்கேறியுள்ளது.தமிழினப் படுகொலையின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விளங்குகின்றது. 

இது இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும்.இந்த அராஜகத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு