யாழ்.பல்கலைகழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அழிப்பு..! மாபாதக செயல் என தமிழக முதல்வர் கண்டனம்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்து அகற்றப்பட்டமையானது உலக தமிழர்களை வேதனையில் ஆழ்த்தியிருப்பதாக கூறியிருக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனங்களையும் தொிவித்திருக்கின்றார். 

இது குறித்து தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் 

எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் 

இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது”. என கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு