முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்புக்கும் இராணுவத்திற்கும் முடிச்சு போடாதீர்கள்..! அதற்கும் எமக்கும் அணு அளவும் தொடர்பில்லை..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டமைக்கும் இராணுவத்தினருக்கும் அணு அளவும் தொடர்பில்லை. என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தொிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, யாழ். பல்கலைக்கழகத்தின் நினைவிடம் இடிக்கப்பட்டமையானது, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம் என கூறிய அவர், 

அந்த விடயத்திற்கும் தமக்கும் அணுவளவேனும் தொடர்பு கிடையாது என கூறுகின்றார்.எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் இந்த விடயத்தில் தலையீட போவதில்லை என இராணுவ தளபதி தெரிவிக்கின்றார்.பல்கலைக்கழகத்திற்குள் அமைதியின்மை ஏற்பட்டு, 

பொலிஸாரினால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத பட்சத்தில் மாத்திரமே, தம்மால் அந்த விவகாரத்தில் தலையீட முடியும் என கூறிய அவர், அதுவரை தம்மால் பல்கலைக்கழக விவகாரத்தில் தொடர்புப்பட முடியாது என தெரிவிக்கின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு