யாழ்.மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! கரவெட்டியில் தொற்றுக்குள்ளான இருவர் அரச உத்தியோகஸ்த்தர்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! கரவெட்டியில் தொற்றுக்குள்ளான இருவர் அரச உத்தியோகஸ்த்தர்கள்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இன்று 126 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

உடுவில் பிரதேசத்தில் 3 பேருக்கும், கரவெட்டி பகுதியில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

கரவெட்டியில் தொற்றுக்குள்ளான இருவர் அரச ஊழியர்கள் எனவும் அவர்களுடன் பணியாற்றிய ஒருவருக்கு ஏற்கனவே தொற்று உறுதியான நிலையில் குறித்த இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு