வவுனியா நகரில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! வவுனியா முடக்கப்படும் அபாயம், துரித நடவடிக்கையில் சுகாதார பிரிவு.

ஆசிரியர் - Editor I

வவுனியா பட்டானிச்சூரை தொடர்ந்து வவுனியா நகரில் உள்ள வர்த்தகர்கள், வர்த்த நிலையங்களில் வேலை பார்த்த 204 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பட்டானிச்சூர் பகுதியில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் நேற்று முன்தினம் திடீர் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நகர்ப்பகுதியில் உள்ள வர்த்தகர்கள் அங்கு பணியாற்றுவோர் 

மற்றும் பட்டானிச்சூர் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறி வர்த்தக நிலையத்தினை திறந்தவர்கள் என 204 பேருக்கு நேற்று முன்தினம் இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று அவர்களுக்கான முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் 

55 பேருக்கு கொரனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியா நகரை மீண்டும் முடக்கி அங்குள்ளவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு