யாழ்.நகரில் இன்று காலை வரையில் 7 வர்த்தக நிலையங்கள் முடக்கம்..! 50 பேர்வரையில் தனிமைப்படுத்தலில், பீ.சி.ஆர் பரிசோதனைக்கும் முஸ்த்தீபு..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை வரையில் யாழ்.நகரில் 7 வர்த்தக நிலையங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், 50 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

பதுளையை சேர்ந்த யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவனுக்கு நேற்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. கச்சோி - நல்லுார் வீதியில் அறை ஒன்றில் தங்கியிருந்து கல்வி கற்கும் மாணவனுக்கே தொற்று உறுதியானது. 

இந்நிலையில் குறித்த மாணவன் சென்றுவந்த இடங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டிருந்த சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார் யாழ்.நகரில் உணவகம் மற்றும் குடிநீர் விற்பனை நிலையம் உள்ளிட்ட 7 வர்த்தக நிலையங்களை இன்று காலை வரை முடக்கியுள்ளனர். 

மேலும் 50 பேர் வரையில் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு 7 மாணவனுடன் தொடர்புபட்ட நாளில் இருந்து 7 நாட்கள் கணக்கில் பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும் என சுகாதார பிரிவினர் தொிவிக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு