யாழ்.மாவட்டத்தில் சந்தைகளை திறக்க அனுமதியில்லை, மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடாத்த தடை..! மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ள சந்தைகளை மீள திறக்கும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை. என யாழ்.மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி தொிவித்திருக்கிறது. 

மேலும் திருமண மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், பிறந்தநாள் நிகழ்வுகள் நடத்த தடை எனினும், 50 பேருக்குட்பட்ட கூட்டங்கள் ஏனைய செயற்பாடுகள் 

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும். எனவும் அத்தோடு, ஆலயங்கள் மற்றும் பொது இடங்களிலும் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்றவாறு செயற்படுத்தலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

அத்துடன் இவ்வருட கச்சதீவு ஆலய உற்சவத்தினை சுகாதார அமைச்சின் அனுமதியுடன் அதனை நடத்துவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு