கிளிநொச்சி - கரும்புதோட்ட காணி 196 ஏக்கர் தாரைவார்க்கப்பட்டது யாருக்கு..? மக்கள் கேள்வி..! சிதம்பர ரகசியம் அம்பலமாகிறது, ஒரு புலனாய்வு பார்வை..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அக்கராயன் - ஸ்கந்தபுரம் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டக் காணி தனியார் நிறுவனம் ஒன்றினால் அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது. கரும்பு தோட்ட காணியின் வருமானங்கள் முறையாக அரச வருமானமாக்கப்படாது 

மாவட்டத்தில் உள்ள பெரிய மனிதர்கள் சிலரினால் சுரண்டப்படுவதாக பொதுமக்கள் முன்னர் கூறியிருந்த குற்றச்சாட்டு நிரூபனமாகியுள்ளது. குறித்த காணி தொடர்பில் தகவல் அறியும் உருமைச்சட்டம் ஊடாக செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் வரையில் அதாவது 25/06/2020ம் திகதி வரை 

கரும்புத்தோட்ட காணி எவருக்கும் குத்தகைக்கு வழங்கப்படவில்லை.என கரைச்சி பிரதேச செயலகம் எழுத்துமூலம் தொிவித்திருக்கின்றது. ஆக கரும்புதோட்டம் காணி குத்தகைக்கு வழங்கப்படாத நிலையில் அங்கு ஆழுகை செலுத்துபவர்கள் யார்? என்ன அடிப்படையில் ஆழுகை செலுத்துகின்றனர்?

மேலும் குறித்த காணி பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் சிலருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. என்ன அடிப்படையில் யார் குத்தகைக்கு வழங்கியது? சட்டவிரோதமாக காணியை அபகரித்துள்ளவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன?

இவ்வாறு மக்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர். 

விரிவான பார்வை..

கரும்புதோட்ட காணி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்டபட்ட கந்தபுரம் பகுதியில் அமைந்துள்ளது. 196 ஏக்கர் 1றூட் 28 பேர்ச் அளவு கொண்ட குறித்த காணியில் 1983ம் ஆண்டுகாலப்பகுதியில் கரும்பு செய்கைக்காக குத்தகையாக பெறப்பட்டுள்ளது. 1983ம் ஆண்டுடன் கரும்பு செய்கை நிறுத்தப்பட்டு 

தெங்கு மற்றும் உப உணவு பயிர் செய்கை மேற்கொள்ளபட்டுவந்துள்ளது. இந்நிலையில் அரசின் குத்தகை ஒப்பந்தத்தின் நோக்கத்திற்கு மாறாக பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டமையானது குறித்த குத்தகை ஒப்பந்தத்தை மீறியதாகவே கருத முடியும். 

கிளிநொச்சி சீனி உற்பத்தி வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தினால் வெளிப்படுத்தப்பட்ட அறிக்கையில் 1964ம் ஆண்டு குறித்த நிறுவனம் 200 ஏக்கர் காணியில் அதன் தொழிலை ஆரம்பித்தது எனவும் அதில் கரும்பு செய்கை மேற்கொள்ளப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் அதில் 1983ம் ஆண்டுக்கு பின்னர் குத்தகை ஒப்பந்தத்திற்கு மாறாக உப உணவு செய்கையும், தெங்கு பயிர் செய்கையும் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளமை வெளிப்படுகின்றது. அவற்றுக்கு இன்று வான் உயர்ந்து காட்சியளிக்கும் தென்னை மரங்கள் சான்று பகிர்வதுடன், 

செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதிகளாக இன்றும் வயல் நிலங்கள் காணப்படுகின்றன. குறித்த விடயத்தினை அப்பிரதேச மக்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். 1980ம் ஆண்டுக்கு பின்னர் 2009 வரை கோபாலசிங்கம் என்பவர் பணிப்பாளராக இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் குறிதத் நபர் 2008ம் ஆண்டு காலப்பகுதியிலேயே குறித்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 35 வருட நீண்ட கால குத்தகை மீண்டும் புதிப்பிக்க வேண்டிய தேவை ற்பட்ட நிலையில் மீண்டும் குறித்த காணியை சீனி உற்பத்தி நிலைய தேவைக்காக 

பயன்படுத்துவதற்கு புதிய இயக்குனர் சபையை அமைத்து அப்போதைய கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு இணை தலைவர்களாக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், விஜயகலா மகேஸ்வரன் மற்றம் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரிடம் சிபாரிசு பெற்றதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த இயக்குனர் சபையில் வடக்கில் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அரச உத்தியோகத்தர்களும் இடம்பிடித்துள்ளமை ஏற்கனவே அம்பலமான உண்மை. குறித்த விடயம் வடமாகாணசபையிலும் பேசப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக தற்போதைய யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர் மா.ஜெயராசா, வைத்தியர் தி.குமணன் உள்ளிட்ட பல வர்த்தகர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை 5 வருடத்திற்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும் மூவரினைக் கொண்ட பணிப்பாளர் சபையில் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தியும் உள்ளடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். குறித்த கரும்பு தோட்ட காணியை மாதிரி பண்ணையாக மாற்றம் செய்து 

பதிவு செய்யப்படாத ஓர் நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி முக்கிய பொறுப்புக்களில் உள்ள சிலர் காணியை தமது பொறுப்பில் எடுக்க முயற்சித்துள்ளமை தொடர்பில் பிரதேச மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் வடமாகாணசபை ஆட்சியில் இருந்த காலத்திலேயே எழுந்திருந்தது. 

அதனை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை மாகாணசபையில் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றார். குறித்த செயற்பாட்டுக்கு மாவட்டத்தின் பொறுப்புவாய்ந்த அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றார்கள்.

27.05.2020 அன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரினால் கரும்பு தோட்ட பணிப்பாளருக்கு அலுவலக ரீதியினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிதத் கடிதத்தில் கரும்பு தோட்ட காணியில் 50 ஏக்கர் சிறுதானிய செய்கைக்கு நீர்பாசனம் வழங்க கூடியதாக உள்ளதாகவும், 

அக்கராயன் குளத்தின் சிறுபோகத்தின் இறுதி நீர் விநியோக திகதியான 25.09.2020 குளத்தின் நீர்மட்டம் 5 அடியாக வரும்வரை இதில் எது முந்தியதோ அதுவாக அமையும் எனவும், இதனை கருத்தில் கொண்டு சிறுதானிய செய்கையை மேற்கொள்ளுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் குறித்த காணி அரச காணியாகவும் எந்தவொரு நபருக்கும் குத்தகைக்க வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கரும்பு தோட்ட பணிப்பாளர் என முகவரியிட்டு அலுவலக ரீதியான கடிதம் ஒன்றை வழங்கியது யாருக்கு?

யார் அந்த பணிப்பாளர்? இதேவேளை கரும்புத்தோட்ட நிறுவனத்தினம் என்பதினால் 10.06.2020 அன்று நீர்பாசன திணைக்களத்தின் பொறியியலாளருக்கு நீர்பாசன வாய்க்காலை திறந்து விடுமாறு எழுதப்பட்ட கடிதத்திற்கு நீர்பாசன திணைக்களமும் அனுமதி வழங்கியுள்ளது. 

அதற்கு அமைவாக கரும்பு தோட்ட காணி என பெயரளவில் குறிப்பிடப்படும் காணியில் இவ்வரும் 20 ஏக்கர் உழுந்து மற்றும் 10 ஏக்கர் கச்சான் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த செய்கைக்கான குத்தகை அல்லது வருமானம் அரச வருமானத்திற்கு கிடைத்திருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை 2 ஏக்கரில் கரும்பு செய்கையை மீண்டு ஆரம்பிப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் குறித்த நிறுவனத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கான சிபாரிசும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மேலும் தகவல்கள் கிடைத்துள்ளது. குறித்த காணிக்கு 2017ம் ஆண்டுக்கு பின்னர் நீர் வினியோகம் செய்யப்பட்டது எனவும், 2020ம் ஆண்டு 50 ஏக்கரில் நிலக்கடலை 

மற்றும் உழுந்து செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை 2020ம் ஆண்டு 2 ஏக்கர் கரும் செய்கைக்கு அரசாங்க அதிபரின் அனுமதியுடன் நீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேவேளை குறித்த நீர் விநியோகத்திற்கு அறவீடு எதுவும் பெறப்படவில்லை எனவும், கரும்பு தோட்ட காணி எனும் பெயரிலேயே வழங்கப்பட்டதாகவும் நீர்பாசன திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.இவ்வாறு அரசாங்கத்திற்கு பெருமளவு வருமானத்தை மாவட்டத்திலிருந்து பெற்று கொடுக்க கூடிய 

கரும்பு தோட்ட காணி அரச உயரதிகாரிகள் மற்றம் அரச முக்கிய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளினால் சுரண்டப்பட்டு வந்துள்ளமை அம்பலமாகியுள்ளது. இதற்கு கிளிநொச்சி மாவட்டத்தின் பொறுப்புவாய்ந்த அரச அதிகாரிகள் பலர் உடந்தையாக இருந்திருக்கின்றனர்.

வருடம் ஒன்றுக்கு 2 கோடிக்கு மேல் இலாபம் பெறக்கூடிய கிளிநொச்சி கந்தபுரம் கரும்பு தோட்ட காணியை ஒரு சிலர் அபகரிக்க எடுத்த முயற்சி தடுத்து நிறுத்தப்படுமா? குறித்த அரச காணியானது சட்டத்துக்கு முரணான வகையில் சிலரால் அபகரிக்க எடுக்கப்படும் முயற்சி முறியடிக்கப்பட்டு 

அவை உரிய முறையில் பேணப்படவோ அல்லது பொது மக்களிற்கு நிபந்தனை அடிப்படையிலாகிலும் பகிரப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். மேலும் குறித்த விடயம் பொறுப்புவாய்ந்தவர்களால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு சம்மந்தப்பட்ட சகல அரச அதிகாரிகள் மீதும்,

சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது மக்களுடைய எதிர்பார்ப்பாகும். ஸ்கந்தபுரம் கிராமத்தில் பெருமளவு மக்கள் காணி அற்று வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை பொறுப்புவாய்ந்தவர்களின் இந்த செயற்பாடு ஏற்றுக்கொள்ள கூடியதா?

ஆவணங்கள்...

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு