கொழும்பிலிருந்து தப்பி ஓடிவந்த அளவெட்டி மற்றும் பூநகரி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! கூட வந்தவர்கள், குடும்பத்தினர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I

யாழ்.அளவெட்டி மற்றும் பூநகரி - பள்ளிக்குடா பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்றிருந்த மேற்படி தொற்றுக்குள்ளான 3 பேர் அடங்கலாக 11 பேருக்கு கொழும்பில் பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

இதன்போது தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்பதாக இவர்கள் கொழும்பிலிருந்து வாகனம் ஒன்றில் தப்பி ஓடி வடக்கிற்கு வந்துள்ளனர். 

இதில் பூநகரியைச் சேர்ந்த ஒன்பது பேரும், பளை மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவருமாக 11 பேர் அடங்கியிருக்கின்றனர்.

அவர்களில் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த ஒருவருக்கும், பள்ளிக்குடாவைச் சேர்ந்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து வந்த தகவலுக்கமைய சுகாதாரப் பிரிவினர் அவர்களை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு மாற்றியுள்ளனர்.

அவர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் வாகனத்தில் பயணித்தவர்கள், அவர்களின் குடும்பங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு