யாழ்.பருத்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலை விடுதி முடக்கம்..! மருத்துவர், தாதியர் உட்பட 7 பேர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I

பருத்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 26 வயதான இளைஞன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவர் உட்பட 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புலோலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று வைத்தியசாலையின் 7ஆவது விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டைநோ மற்றும் வயிற்று வலி, வாந்தி

ஆகிய அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது. இன்று வெளியான பி.சி.ஆர். முடிவுகளில் அவருக்குத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து 

குறித்த இளைஞன் சிகிச்சை பெற்றுவந்த 7 இலக்க விடுதி முடக்கப்பட்டதுடன், அந்த விடுதியில் பணியாற்றிய சிகிச்சையளித்த மருத்துவர், தாதியர், சிற்றூழியர்கள் உட்பட 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு