யாழ்.பருத்துறையில் -மந்திகை வைத்தியசாலையில் இருமல், தலைவலி மற்றும் வாந்தியுடன் அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I

இருமல், தலைவலி மற்றும் வாந்தியுடன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த நபர் பருத்துறை - புலோலி பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

என மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தொிவித்துள்ளார். குறித்த நபர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு யாழ்.மாவட்டத்தில் அதிக தொற்று அடையாளம் காணப்பட்ட மருதனார்மடத்துடன் தொடர்புள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவருக்கு நடவத்தப்பட்ட 

பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. சுகாதாரப் பிரிவினர் ஊடாக அறிய முடிகின்றது. மேலும் குறித்த நபருக்கு 

சிகிச்சையளிக்கப்பட்ட விடுதி முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு