யாழ்.பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக நிர்வாகத்தின் செயற்பாடுகளை கண்டித்து வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த கோப்பாய் பொலிஸார் போராட்டத்தை கைவிடுமாறும், இந்த விடையத்தை உயர் அதிகரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்துமாறும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

பொலிஸாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல்கலைக்கழகத்திற்குள் நடந்துவரும் பல முறைகேடுகள் குறித்து மெளனம் காக்கும் நிர்வாகம், பல்கலைக்கழக வாயிலில் சிங்கள மாணவர்கள் சண்டையிட்டதை வேடிக்கை பார்த்த நிர்வாகம்,

ஊடகங்களுக்கு கருத்து கூறியதாக எம்மீது வகுப்பு தடை விதித்துள்ளமைக்கு பின்னால் நிகழ்ச்சி நிரல் உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதாவது புதிய மாணவர் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கவேண்டிய மாணவர்களுக்கு வகுப்புதடை விதிக்கப்பட்டு தமக்கு சாதகமானவர்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு