யாழ்.மாவட்டத்தின் கொரோனா நிலமைகள், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து இராணுவ அதிகாரி தலமையில் சிறப்பு கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலமைகள் குறித்து ஆராயும் சிறப்பு கலந்துரையாடல் எதிர்வரும் வியாழகிழமை நடைபெறவுள்ளதா மாவட்டத்தின் கொரோனா நடவடிக்கைகளுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியும் மாவட்ட கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார கூறியுள்ளார்.

ஜனாதிபதியினால் மாவட்டம்தோறும் கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரிகளாக ராணுவத்தின் உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் . மாவட்டத்தில் தற்போதைய நிலையில் மேலும் கொரோனா  பரவலைஎவ்வாறு தடுக்க முடியும் என்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்.மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரி தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த கூட்டத்திற்கு பிரதேசசெயலாளர்கள் சுகாதார திணைக்கள பணிப்பாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு